lyrics
என் இதயம் யாருக்குத் தெரியும் என் வேதனை யாருக்குப் புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னைத் தேற்றக் கூடும் -2 1 நெஞ்சின் சோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் -2 தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே -2 உள்ளம் ஏங்குதே -2 2 சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ -2 வீசும் புயலிலே படகும் தப்புமோ -2 படகும் தப்புமோ-2 3 மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ -2 உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ -2 ஒன்று சேருமோ-2 4 அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ -2 இயேசுராஜனின் முகத்தின் வெளிச்சமே -2 முகத்தின் வெளிச்சமே -2
No comments:
Post a Comment