Wednesday 30 August 2017

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)



lyrics
 
இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் 
இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2
                      1
ஓங்கும் குரலை காக்க வேண்டும் உன் நாமம் பாடவே 
என்னுள்ளம் தேறவே என் தாகம் தீரவே உன் அன்பில் 
வாழவே என் தேவா தேவா வா 
                      2
ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும் வான்தீபம் காணவே 
உன் அன்பில் வாழவே உன்னோடு சேரவே என்னில் 
நீ வாழவே என் தேவா தேவா வா  

Padaippu yellam umake sontham song(படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் பாடல்)



lyrics
 
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் 
நானும் உந்தன் கைவண்ணம் 
குயில்கள் பாடும் கிளிகள் பேசும் 
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே -2
            1
இயற்க்கை உனது ஓவியம் 
இணையில்லாத காவியம் -2
அகிலமேன்னும் ஆலயம் நானும் 
அதில் ஓர் ஆகமம் -2
உள்ளம் எந்தன் உள்ளம் அது 
எந்நாளும் உன் இல்லமே -2
            2
இதயம் என்னும் வீணையில் 
அன்பை மீட்டும் வேளையில் -2
வசந்த ராகம் கேட்கவே 
ஏழை என்னில் வாருமே -2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும்
என் வாழ்வு உன்னோடுதான் -2

Monday 28 August 2017

Kanikkai thanthom karthavae song (காணிக்கை தந்தோம் கர்த்தாவே பாடல்)



lyrics
 
காணிக்கை தந்தோம் கர்த்தாவே 
ஏற்றுக்கொள் எம்மையே இப்போது 
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே 
காணிக்கை நாங்கள் தந்தோமே 
             1
நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் ரட்சகர் கொடுத்தது 
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது 
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் -2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே 
ஆனாலும் உன் அன்பு மாறாது 
              2
புகழ்ச்சிப் பலி நாங்கள் தரும் புதிய காணிக்கை -2
கவலைகள் கண்ணீர் எது வந்த போதும் -2
கர்த்தாவே உன் நாமம் பாடுவோம் 

En nenjil yesuvae song (என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் பாடல் )



lyrics
 
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் 
எந்நாளும் உன் அன்பில் நான் வாழ வேண்டும் 
                 1
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும்
எந்நாளும் உன் புகழ் நான் பாட வேண்டும் 
                 2
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும்
இல்லாதார் குறையெல்லாம் நான் தீர்க்க வேண்டும் 
                 3
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும்
சமதர்ம சமுதாயம் நான் காண வேண்டும்  

Thursday 24 August 2017

Anbin deva narkarunaiyilae song (அன்பின் தேவ நற்கருணையிலே பாடல் )



lyrics
 
அன்பின் தேவ நற்கருணையிலே 
அழியாப் புகழோடு வாழ்பவரே 
அன்புப் பாதையில் வழினடந்தே 
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் 
   1
அற்புதமாக எமைப் படைத்தீர் 
தற்பரன் நீரே எமை மீட்டீர் 
பொற்புடன் அப்ப ரசகுணத்தில் 
எப்பொழுதும் வாழ் இறைவனாவீர் 
எத்தனை வழிகளில் உமதன்பை 
எண்பிதெமை நீர் ஆட்கொண்டீர் 
   2
கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் என்னை நிலைநிறுத்தும் 
நற்கருணை விசுவாசமதில் 
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர் 
இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும் 
யாவரும் வாழ தயை புரிவீர்  

En inba thunba neram song (என் இன்ப துன்ப நேரம் பாடல் )



lyrics
 
என் இன்ப துன்ப நேரம் 
நான் உம்மைச் சேருவேன் -2
நான் நம்பிடுவேன் 
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 
  1
நான் நம்பிடும் நேசர் 
இயேசுவே நான் என்றென்றும் நம்பிடுவேன் -2
தேவனே ராஜனே தேற்றி 
எம்மை தாங்கிடுமே -2
  2
இவரே நல்ல நேசர் இயேசுவே 
என்றும் தாங்கி நடத்துவார் -2
தீமைகள் சேதங்கள் 
நேராதென்னைக் காத்திடுவார் -2 

En ithayathin kayaththai song (என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் பாடல்)



lyrics
 
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் 
எந்தன் ஏசைய்யா -2
கரைகாணா படகைப்போல 
தடுமாறும் வாழ்க்கையைய்யா
   1
யோவானைப்போல உன்மார்பிலே 
இளைப்பாற வேண்டுமைய்யா -2
   2
பலவீனனான என்னையும் – உம்
பெலத்தால் இடைக்கட்டுவீர் -2
   3
காணாமல் போன ஆடு நான்
அன்போடு தேடிநீரே -2

Monday 14 August 2017

GUNAMALIPAVAREA SONG (குணமளிப்பவரே குணமளிப்பவரே பாடல்)



lyrics
 
குணமளிப்பவரே குணமளிப்பவரே
என்னை குணப்படுத்தும் -2
எந்தன் இயேசுவே இயேசுவே 
என்னை குணப்படுத்தும் -2
சுகமளிப்பவரே சுகமளிப்பவரே 
என்னை சுகப்படுத்தும்-2 
எந்தன் இயேசுவே இயேசுவே 
என்னை சுகப்படுத்தும் -2
    1
என் உடல் வேதனைகள் 
உம முன்னாள் வைத்தேனைய்யா 
எந்தன் கண்ணீரினால் 
உந்தன் பாதம் நனைதேனைய்யா -2
தாவீதின் மைந்தனே மனமிரங்கும் ஐய்யா 
உயிருள்ள தேவனே உயிர்தாரும் ஐய்யா 
இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே 
   2
உம் திரு இரத்தத்தினால் 
என்னைக் கழுவமைய்யா 
என் நாடி நரம்புகளை 
வலுப்பெற செய்யுமைய்யா-2
தாவீதின் மைந்தனே மனமிரங்கும் ஐய்யா 
உயிருள்ள தேவனே உயிர்தாரும் ஐய்யா 
இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே 

En ithayam yarukku theriyum song(என் இதயம் யாருக்குத் தெரியும் பாடல்)



lyrics
 
என் இதயம் யாருக்குத் தெரியும் 
என் வேதனை யாருக்குப் புரியும் 
என் தனிமை என் சோர்வுகள் 
யார் என்னைத் தேற்றக் கூடும் -2
    1
நெஞ்சின் சோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் -2
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே -2
உள்ளம் ஏங்குதே -2
    2
சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ -2
வீசும் புயலிலே படகும் தப்புமோ -2
படகும் தப்புமோ-2
   3
மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ -2
உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ -2
ஒன்று சேருமோ-2
    4
அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ -2
இயேசுராஜனின் முகத்தின் வெளிச்சமே -2
முகத்தின் வெளிச்சமே -2

Saturday 12 August 2017

Athisayangal seigiravar song (அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்)



lyrics
 
அதிசயங்கள் செய்கிறவர் நம் 
அருகில் இருக்கிறார் 
அற்புதங்கள் செய்கிறவர் – என்றும் 
நமக்குள் வாழ்கிறார் 
   1
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – 2 – வெறும் 
தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றினார் அதிசயம்
   2
செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம் -2 – புயல் 
காற்றை தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் <
   3
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – 2 – ஒரு 
சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் 
   4
பாவியான என்னையும் உயத்தினார் அதிசயம் -2- ஏழை 
என்மீது நேசக் கரம் நீட்டினார் அதிசயம் 

Irakkam niraintha theivamae song ( இரக்கம் நிறைந்த தெய்வமே)



lyrics
 
இரக்கம் நிறைந்த தெய்வமே 
இதயம் திறந்து அழைக்கின்றேன் 
உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் 
   1
பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும் 
பெயரும் புகழும் என்னை சூழ்ந்தாலும் 
உதயம் தேடும் மலரைப் போலவே 
உயிரின் உயிரே உன்னைத் தேடினேன் 
நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை 
நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா 
வார்த்தை ஓன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே 
   2
தேடும் உலக செல்வம் நிறைந்தாலும் 
பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும் 
அலைகள் ஓயா கடலைப் போலவே 
அன்பே உனது அருளை வேண்டினேன் 
தாயில்லா குழந்தை போலவே 
தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே 
முழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே 
காலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே 

Unnatha vallamayai song(உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்- Holy spirit song)



lyrics
 
உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் 
பரலோக வல்லமையை இந்நேரம் பொழியுமையா 
   1
உலர்ந்துபோன எலும்புகளாய் 
உலரப்பட்ட எங்களிலே -2
உயிர் தரும் ஆவியை தந்து 
வீரச் சேனையாய் மாற்றிடுமே -2
   2
வாக்களித்த வல்லமையை 
பெந்தகோஸ்தே நாளினிலே -2
பொழிந்த இறைவா எங்களிலும் 
நிரம்பி வழியச் செய்தருளும் -2
   3
அடிமை விலங்குகள் தகர்த்திடவே -2
அக்கினி ஆவியை ஈந்திடுமே 
தடைகளும் களைகளும் எரிந்திடவே 
மீட்ப்பின் ஆவியை ஊற்றிடுமே -2

Imaippoluthenum enaip piriyaamal song (இமைப்பொழுதேனும் எனைப் பிரியாமல்)



lyrics
 
இமைப்பொழுதேனும் எனைப் பிரியாமல் 
காக்கும் நல் தேவனாக 
எல்லாமும் தந்து என்னோடு இருக்கும் 
இயேசுவே வாழ்க வாழ்க -2
   1
இயேசுவே உமது பெயரைச் சொன்னாலே 
இதயத்தின் கவலைகள் மறையுதையா 
நெஞ்சிலே உமையே நினைக்கின்ற போது 
உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது -2
நலம் தரும் நல்லவரே எழுந்திங்கு வாருமய்யா 
குறைவில்லா புதுவாழ்வு தருபவர் நீரல்லவா 
ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடி 
ஆண்டவா உம்மை துதிக்க வந்தேன் 
   2
தாளத்தை இழந்த பாடலைப் போல 
உன்னை நான் பிரிந்தேன் வாழ்க்கையிலே 
உன்திரு வார்த்தையை தியானிக்கும் போது 
பலன்தரும் நல்ல நிலமானேன் -2
ஆகாய கங்கையைப் போல் அருள்மழை பொழிபவரே 
பூ மழை தூவி உந்தன் பொற்பாதம் பணிகின்றேன் 
கண்மணிபோல் என்னை காக்கும் ராஜா 
கானங்கள் இசைத்து துதிக்க வந்தேன் 

Monday 7 August 2017

Kadal kadanthu sentralum song (கடல் கடந்து சென்றாலும் பாடல் ) தூர தேசம் பயணிப்பவர்களில் பாடல்



lyrics
 
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் 
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் 
உன்னோடு நானிருப்பேன் – அஞ்சாதே கலங்காதே – 2
   1
தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் 
பொன்விளை நிலம் போலே 
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை 
உயர்ந்தது அவராலே -2
பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே 
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே 
அஞ்சாதே கலங்காதே 
   2
பாலையில் பாதையும் பால்வெளி ஓடையும் 
தோன்றிடும் அவர் கையால் 
வான்படை ஆண்டவர் வாய் மொழியால் வரும் 
மேன்மையை எவர் சொல்வார் – 2
பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார் 
இறையாட்சியில் அவர் மாட்சியில் மானுடம் ஒன்றாகும் 
அஞ்சாதே கலங்காதே 

Saturday 5 August 2017

Aaviyanavarae anbin aaviyanavarae song (ஆவியானவரே அன்பின் ஆவியானவரே பாடல் )



lyrics
 
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே 
இப்போ வாரும் இறங்கி வாரும் 
எங்கள் மத்தியிலே  - 2
   1
உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே -2
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே -2
   2
சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே -2
ஆன்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே -2
   3
ஆவியின் வரங்களினால் எம்மையும் நிரப்பிடுமே -2
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே -2

satha sahaya matha song (சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதா பாடல் )



lyrics
 
சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதா
தினந்தோறும் யாரும் வேண்டினாலும் 
இல்லை எண்ணாத மாதா 
   1
ஆதி பிதா ஆனவரின் அன்பான புத்திரியே 
ஜோதி சுடர் தேவன் திரு தாயான உத்தமியே 
   2
இஸ்ப்பிரித்து சாந்து தேவன் இன்பமே பத்தினியே 
இஸ்டபிர சாதவாக்கால் என்றதும் சத்தியமே 
   3
வாசம் சேரும் ரோஜாப்பூவே மாசற்ற தாய் மரியே 
நேசமுடன் இயேசுவையே நேசிக்க செய்குவாயே

Satha sahaya thayae song(சதா சகாயத் தாயே சகல மைந்தர்க்குமே பாடல் )



lyrics
 
சதா சகாயத் தாயே சகல மைந்தர்க்குமே 
இதய உணர்ச்சி ததும்பும் உனையே தினம் நினைத்தாலே 
                   1
உதயத் தாரகை இருளில் நீயென உலகம் கூறிடுமே 
பதமும்  அடைந்தோர் பாவமும் களைவாய் பரம நாயகியே 
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ 
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம் 
                   2
புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே புனித மாமரியே 
சுதனும் உனையே தாயென அளித்தார் சிலுவை அடியிலே  
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ 
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம்

Friday 4 August 2017

Ennodu nee pesa vanthai song (என்னோடு நீ பேச வந்தாய் பாடல்)



lyrics
 
என்னோடு நீ பேச வந்தாய் 
என் வாழ்வை நீ மாற்றி நின்றாய் – 2
என் தெய்வமே -2
நீ இன்றி நானில்லையே – உன் 
நினைவின்றி வாழ்வில்லையே 
  1
இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ 
தள்ளாடி நான் தடுமாறினேன் 
கண்மூடி நான் வழிமாறினேன் 
தீராதத் துன்பங்களில் – நீ 
தாயாகி தாலாட்டினாய் 
  2
உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ 
மழையின் மேகம் நீ மலரின் மனமும் நீ 
என் பாதையில் முன் போகவா 
கண்போலவே எனைக் காக்க வா 
ஆதாரம் நீயாகவே – உன் 
அன்பொன்றே எனதாகவே

Magilvom magilvom thinam agamalivom song (மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் பாடல்)



lyrics
 
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் 
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் 
இந்த பார்த்தலத்தின் சொந்தக்காரர் அவர் 
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் 
ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே 
இது மாபெரும் பாக்கியமே – இந்த 
   1
சின்னஞ்சிறு வயதில் என்னை குறித்துவிட்டார் 
தூரம் போயினும் கண்டுகொண்டார் – 2
தமது ஜீவனை எனக்கும் அளித்து 
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் ஆ... ஆ...
   2
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று 
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் – 2
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை 
அவர் வரும்வரை காத்துக்கொள்வேன் ஆ... ஆ....

Narkarunai natharae thunaiyaga vaarumae song(நற்கருணை நாதரே என் துணையாக வாருமே)



lyrics
 
நற்கருணை நாதரே என் துணையாக வாருமே -2
மாறாத பாசம் வைத்தேன் இவ்வேளை 
துணையாக வாருமே – 2
மனம் திறந்து பேச மருரூபமாகிட துணையாக வாருமே 
   1
கனிந்துருகும் அன்பில் கரையேற்றம் பெறவே
துணையாக வாருமே – 2
கருணை கொண்டு என் கதியே என்னோடு 
துணையாக வாருமே – 2
   2
எனதிந்த நிலையில் என்னோடு நடந்திட 
துணையாக வாருமே – 2
எண்ணில்லா வரங்கள் என்னில் வழங்கிட 
துணையாக வாருமே – 2
   3
உடைந்தெந்தன் உள்ளம் உயிரூட்டம் பெறவே 
துணையாக வாருமே – 2
ஊனுடல் உம்மாலே உணவூட்டம் பெறவே 
துணையாக வாருமே – 2
   4
அலைபாயும் நெஞ்சம் அது தேடும் தஞ்சம் 
துணையாக வாருமே – 2
ஆத்மாவின் ராகம் அது உந்தன் பாதம் 
துணையாக வாருமே – 2

Wednesday 2 August 2017

ummai allamal enakku yaru undu song(உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு)


lyrics
 
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு 
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு 
என் இயேசய்யா  அல்லேலூயா
என் இயேசய்யா  அல்லேலூயா
         1
இன்பத்திலும் நீரே 
துன்பத்திலும் நீரே – 2
என் நம்ம்பிக்கை ஐயா நீர் தானே -2 
         2
என் சிநேகமும் நீரே 
என் ஆசையும் நீரே – 2
என் எல்லாமும் ஐயா நீர்தானே – 2
         3
இம்மையிலும் நீரே 
வறுமையிலும் நீரே – 2
என்னாளுமே ஐயா நீர்தானே – 2

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)

lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...