lyrics
காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மையே இப்போது கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே காணிக்கை நாங்கள் தந்தோமே 1 நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் ரட்சகர் கொடுத்தது மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் -2 ஆகாயம் மாறும் கடவுளின் மகனே ஆனாலும் உன் அன்பு மாறாது 2 புகழ்ச்சிப் பலி நாங்கள் தரும் புதிய காணிக்கை -2 கவலைகள் கண்ணீர் எது வந்த போதும் -2 கர்த்தாவே உன் நாமம் பாடுவோம்
No comments:
Post a Comment