lyrics
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே -2
1
இயற்க்கை உனது ஓவியம்
இணையில்லாத காவியம் -2
அகிலமேன்னும் ஆலயம் நானும்
அதில் ஓர் ஆகமம் -2
உள்ளம் எந்தன் உள்ளம் அது
எந்நாளும் உன் இல்லமே -2
2
இதயம் என்னும் வீணையில்
அன்பை மீட்டும் வேளையில் -2
வசந்த ராகம் கேட்கவே
ஏழை என்னில் வாருமே -2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும்
என் வாழ்வு உன்னோடுதான் -2

No comments:
Post a Comment