lyrics
இமைப்பொழுதேனும் எனைப் பிரியாமல் காக்கும் நல் தேவனாக எல்லாமும் தந்து என்னோடு இருக்கும் இயேசுவே வாழ்க வாழ்க -2 1 இயேசுவே உமது பெயரைச் சொன்னாலே இதயத்தின் கவலைகள் மறையுதையா நெஞ்சிலே உமையே நினைக்கின்ற போது உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது -2 நலம் தரும் நல்லவரே எழுந்திங்கு வாருமய்யா குறைவில்லா புதுவாழ்வு தருபவர் நீரல்லவா ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடி ஆண்டவா உம்மை துதிக்க வந்தேன் 2 தாளத்தை இழந்த பாடலைப் போல உன்னை நான் பிரிந்தேன் வாழ்க்கையிலே உன்திரு வார்த்தையை தியானிக்கும் போது பலன்தரும் நல்ல நிலமானேன் -2 ஆகாய கங்கையைப் போல் அருள்மழை பொழிபவரே பூ மழை தூவி உந்தன் பொற்பாதம் பணிகின்றேன் கண்மணிபோல் என்னை காக்கும் ராஜா கானங்கள் இசைத்து துதிக்க வந்தேன்
No comments:
Post a Comment