lyrics
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நானிருப்பேன் – அஞ்சாதே கலங்காதே – 2 1 தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன்விளை நிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை உயர்ந்தது அவராலே -2 பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே கலங்காதே 2 பாலையில் பாதையும் பால்வெளி ஓடையும் தோன்றிடும் அவர் கையால் வான்படை ஆண்டவர் வாய் மொழியால் வரும் மேன்மையை எவர் சொல்வார் – 2 பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார் இறையாட்சியில் அவர் மாட்சியில் மானுடம் ஒன்றாகும் அஞ்சாதே கலங்காதே
Jesus Christ
ReplyDelete