Monday, 7 August 2017

Kadal kadanthu sentralum song (கடல் கடந்து சென்றாலும் பாடல் ) தூர தேசம் பயணிப்பவர்களில் பாடல்



lyrics
 
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் 
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் 
உன்னோடு நானிருப்பேன் – அஞ்சாதே கலங்காதே – 2
   1
தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் 
பொன்விளை நிலம் போலே 
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை 
உயர்ந்தது அவராலே -2
பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே 
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே 
அஞ்சாதே கலங்காதே 
   2
பாலையில் பாதையும் பால்வெளி ஓடையும் 
தோன்றிடும் அவர் கையால் 
வான்படை ஆண்டவர் வாய் மொழியால் வரும் 
மேன்மையை எவர் சொல்வார் – 2
பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார் 
இறையாட்சியில் அவர் மாட்சியில் மானுடம் ஒன்றாகும் 
அஞ்சாதே கலங்காதே 

1 comment:

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)

lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...