lyrics
என் சுமை எளிது என் நுகம் இனிது என்று மொழிந்தவரே வருந்தி சுமக்கும் மாந்தரே என்னிடம் வாருங்கள் என்றவரே நீரே என் அடைக்கலம் – 2 இயேசுவின் இருதயமே – இறை இயேசுவின் இருதயமே 1 இரக்கத்தின் ஊற்றாம் இறைவா எம் ஜெபம் கேட்டருள்வீர் ஏழைகளை செல்வராக்கும் இதயமே உமதன்றோ – கருணை இதயமே உமதன்றோ 2 நீயல்லால் உலகில் வேறு நிலையான அரண் இல்லையே தாய் என்னை வெறுத்திட்ட போதும் நீ என்னை மறப்பதில்லை – என்றும் நீ என்னை இகழ்வதில்லை
No comments:
Post a Comment