lyrics
என் இதயம் யாருக்குத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னைத் தேற்றக் கூடும் -2
1
நெஞ்சின் சோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் -2
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே -2
உள்ளம் ஏங்குதே -2
2
சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ -2
வீசும் புயலிலே படகும் தப்புமோ -2
படகும் தப்புமோ-2
3
மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ -2
உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ -2
ஒன்று சேருமோ-2
4
அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ -2
இயேசுராஜனின் முகத்தின் வெளிச்சமே -2
முகத்தின் வெளிச்சமே -2


No comments:
Post a Comment