lyrics
இதய அன்பு பொங்கிவழியும் உந்தன் சந்நிதி என் வாழ்வின் நிம்மதி இமைகள் திறந்து விழிகள் பேச இதயம் காணுதே புது வாழ்வின் நிம்மதி நீயே நிம்மதி .. நீயே நிம்மதி 1 கால்கள் சோர்ந்து வீழும்போது நீயே நிம்மதி மனக் கவலையினால் வாழும்போது நீயே நிம்மதி வாழ்வின் சுமைகள் அழுத்தும் போது நீயே நிம்மதி புது வசந்தமாக என்னில் வந்தாய் நீயே நிம்மதி நீயே நிம்மதி .. நீயே நிம்மதி 2 அமைதி தேடி வந்தபோது நீயே நிம்மதி - என் ஆறுதலாய் ஆனவரே நீயே நிம்மதி சுகமளிக்கும் மருத்துவரே நீயே நிம்மதி - என்னில் அதிசயங்கள் செய்பவரே நீயே நிம்மதி நீயே நிம்மதி .. நீயே நிம்மதி
No comments:
Post a Comment